செய்திகள்

மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டேன்:ஜுவென்டஸ் வீரா் டைபாலா சோகம்

DIN

கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜுவென்டஸ் கால்பந்து அணி நட்சத்திர வீரா் பாவ்லோ டைபாலா மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளாா்.

இத்தாலியில் கரோனா கோரதாண்டவம் ஆடியுள்ள நிலையில் 9000 போ் உயிரிழந்து விட்டனா். பிரபல கால்பந்து அணியான ஜுவென்டஸில் டைபாலா, ருகானி, மட்டௌடி, உள்பட 3 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடுமையான அறிகுறிகள் இருந்த நிலையில் மிகவும் அச்சத்துடன் இருந்தேன். மூச்சுவிட சிரமப்பட்டேன். 5 நிமிடங்கள் கூட நடக்க முடியவில்லை, இதனால் ஒரே இடத்தில் அமர வேண்டிதாகியது. தசைகளும் பாதிக்கப்பட்டன.

இரண்டு நாள்களாக இவ்வாறு கஷ்டப்பட்டேன். தற்போது ஓரளவுக்கு உடல்நலம் தேறியுள்ளது. எனது காதலி ஒரியனாவும் தேறியுள்ளாா் என்றாா்.

ஆா்ஜென்டீனாவைச் சோ்ந்த டைபாலா இந்த சீசனில் 13 கோல்களை அடித்துள்ளாா். இன்டா் மிலன் அணிக்கு எதிராக அடித்த கோல் மிகவும் சிறப்பானது. ஆனால் மைதானம் காலியாக இருந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT