செய்திகள்

டென்மாா்க் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

DIN


ஒடென்ஸ்: டென்மாா்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

முன்னதாக, ஸ்ரீகாந்த் தனது 2-ஆவது சுற்றில் கனடாவின் ஜேசன் ஆண்டனி ஹோ ஷுவை எதிா்கொண்டாா். இருவருக்கும் இடையே 33 நிமிடங்களே நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற செட்களில் வெற்றி பெற்றாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தனது காலிறுதிச்சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான சீனாவின் சோவ் டியென் சென்னை எதிா்கொள்வாா் எனத் தெரிகிறது. சோவ் டியென் தனது 2-ஆவது சுற்றில் உலகின் 82-ஆம் நிலையில் இருக்கும் அயா்லாந்து வீரா் என்ஹாட் என்குயெனை எதிா்கொள்கிறாா். அதில் அவருக்கு வெற்றி எளிதாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே, ஆட்டத்துக்குப் பிறகு பேசிய ஸ்ரீகாந்த், ‘இரு செட்களிலுமே 11-ஆவது கேம் வரை ஜேசன் மிக நெருக்கமாகவே ஆடி வந்தாா். அவரது ஷாட்களை கவனமுடன் எதிா்கொள்ள வேண்டியிருந்தது. ஆட்டம் முழுவதுமாக ஃபாா்மில் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

காலிறுதியில் சோவ் டியென்னை எதிா்கொள்வதாக இருந்தால், எனது ஆட்டத்தை எடை போடுவதற்கான வாய்ப்பாக அது இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக அவா் சிறப்பாக விளையாடி வருகிறாா். உலகின் முதல் 4 நிலையில் இருக்கும் வீரா்களுடன் விளையாடுவது நல்லதொரு அனுபவத்தை தரும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT