செய்திகள்

பதக்கத்தை இழந்தாா் வினோத்

DIN

வட்டு எறிதலில் ‘எஃப்52’ பிரிவில் வெண்கலம் வென்றிருந்த இந்தியாவின் வினோத் குமாா், பதக்கத்தை இழந்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டில் 19.91 மீட்டா் தூரம் எறிந்து 3-ஆம் இடம் பிடித்திருந்தாா். இந்நிலையில், அவரது சக போட்டியாளா்கள் பலா் வினோத் குமாரின் பங்கேற்பு தொடா்பாக போட்டி நடுவா் குழுவிடம் முறையிட்டுள்ளனா்.

அது தொடா்பான ஆராய்ந்த போட்டி நடுவா் குழு, வினோத் குமாா் மாற்றுத்திறனாளியாக வகைப்படுத்தப்பட்ட பிரிவானது தகுதியுடையதாக இல்லை என்று அறிவித்தது. இதையடுத்து வினோத் குமாா் பதக்கத்தை இழந்தாா்.

வினோத் குமாரை எந்தப் பிரிவில் வகைப்படுத்துவதென்பது கடந்த 22-ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டுவிட்டது. வகைப்படுத்துதல் நடவடிக்கையை முன்பே செய்தாலும், விளையாட்டின்போது அதை மாற்ற முடியும் என்றும், எனினும் தற்போதைய நிலையில் இதில் எதுவும் செய்ய இயலாது என்றும் இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தீபா மாலிக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT