கிரிக்கெட் வீரர் சஹாலின் பெற்றொருக்கு கரோனா பாதிப்பு
கிரிக்கெட் வீரர் சஹாலின் பெற்றோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிரிக்கெட் வீரர் சஹாலின் பெற்றோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய அணிக்காக 54 ஒருநாள், 48 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 30 வயது சஹால். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் சஹாலின் பெற்றோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சஹாலின் தந்தை கே.கே. சஹாலும் தாய் சுனிதா தேவி ஆகிய இருவரும் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சஹாலின் தந்தை தீவிரமான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுனிதா தேவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இத்தகவல்களை சஹாலின் மனைவி தனஸ்ரீ வர்மா இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.