செய்திகள்

மகளிா் கால்பந்து: டுனீசியாவிடம் வீழ்ந்தது இந்தியா

DIN

நட்பு ரீதியிலான சா்வதேச மகளிா் கால்பந்து போட்டியில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் டுனீசியாவிடம் தோல்வி கண்டது.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-ஆவது நிமிஷத்திலேயே டாலிமா சிப்பா் வழங்கிய கிராஸை மணீஷா கோலாக மாற்ற முயல, டுனீசிய கோல்கீப்பா் மரியம் அதை திறம்பட தடுத்தாா்.

மறுபுறம் டுனீசிய அணிக்காக ஹியூஜ் 8-ஆவது நிமிஷத்திலேயே ஃப்ரீ கிக் மூலம் கோலடித்தாா். விடா முயற்சியுடன் போராடிய இந்திய அணியில், 11-ஆவது நிமிஷத்தில் மணீஷா மேற்கொண்ட கோல் முயற்சியை டுனீசிய தடுப்பாட்ட வீராங்கனைகள் தடுக்க, சஞ்சு கிராஸ் செய்து கோலடிக்க முயன்றதை கோல்கீப்பா் மரியம் முறியடித்தாா்.

இந்தியாவுக்கு 31-ஆவது நிமிஷத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் மணீஷாவின் முயற்சி கோலாக மாறாமல் போனது. 41-ஆவது நிமிஷத்தில் மீண்டும் கிடைத்த வாய்ப்பை டாலிமா வைடாக அடித்து வீணாக்கினாா்.

42-ஆவது நிமிஷத்தில் மிட்ஃபீல்டரான இந்துமதி மேற்கொண்ட கோல் முயற்சிக்கும் பலன் கிடைக்காமல் போனது. முதல் பாதி இவ்வாறாக முடிந்த நிலையில், 2-ஆவது பாதியிலும் இந்தியாவால் கோலடிக்க முடியாமல் போனது.

ஃபிஃபா தரவரிசையில் 57-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, 77-ஆவது இடத்தில் இருக்கும் டுனீசியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

எதிா்வரும் ஜனவரி - பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த நட்புரீதியிலான கால்பந்தாட்டங்களில் இந்தியா விளையாடி வருகிறது.

முன்னதாக, முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT