செய்திகள்

அதனால்தான் எனக்குச் சந்தேகமாக உள்ளது: ரோஹித் சர்மாவை கேப்டனாகத் தேர்வு செய்வது பற்றி கவாஸ்கர்

DIN

ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது குறித்து தனது கருத்தை முன்னாள் வீரர் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

இந்திய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாகவும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலியின் விலகலுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

உடற்தகுதிச் சிக்கல் ரோஹித் சர்மாவிடம் உள்ளது. நல்ல உடற்தகுதியுடன் எல்லா ஆட்டங்களிலும் விளையாடக் கூடிய வீரர் தான் இந்திய அணிக்குத் தேவை. ஆனால் ரோஹித் சர்மாவுக்கு அடிக்கடித் தசைநார் காயங்கள் ஏற்படுகின்றன. அதனால் எனக்குச் சந்தேகம் உள்ளது. எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடக் கூடிய வீரர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT