செய்திகள்

அதனால்தான் எனக்குச் சந்தேகமாக உள்ளது: ரோஹித் சர்மாவை கேப்டனாகத் தேர்வு செய்வது பற்றி கவாஸ்கர்

ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது குறித்து தனது கருத்தை முன்னாள் வீரர் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

DIN

ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது குறித்து தனது கருத்தை முன்னாள் வீரர் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

இந்திய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாகவும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலியின் விலகலுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

உடற்தகுதிச் சிக்கல் ரோஹித் சர்மாவிடம் உள்ளது. நல்ல உடற்தகுதியுடன் எல்லா ஆட்டங்களிலும் விளையாடக் கூடிய வீரர் தான் இந்திய அணிக்குத் தேவை. ஆனால் ரோஹித் சர்மாவுக்கு அடிக்கடித் தசைநார் காயங்கள் ஏற்படுகின்றன. அதனால் எனக்குச் சந்தேகம் உள்ளது. எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடக் கூடிய வீரர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT