செய்திகள்

மேயர்ஸ், புரூக்ஸ் சதம்: மே.இ. தீவுகள் 308 ரன்கள் குவிப்பு

DIN


நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

நெதர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு ஒருநாள் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 2-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ஷை ஹோப் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2-வது விக்கெட்டுக்கு கைல் மேயர்ஸ் மற்றும் ஷமார் பூரூக்ஸ் சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த இணை 184 ரன்கள் சேர்த்த நிலையில் சதமடித்த மேயர்ஸ் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கியவர்கள் சோபிக்கத் தவறினர்.

எனினும், புரூக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து 101 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

நெதர்லாந்து தரப்பில் லோகன் வேன் பீக், விவியன் கிங்மா, ரியான் கிளெய்ன், பாஸ் டே லீட், ஆர்யன் தத் மற்றும் பீட்டர் சீலர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT