செய்திகள்

‘உலக கோப்பை அணிக்கு அனுபவமுள்ள வீரர்கள் தேவை’- இர்பான் பதான் தேர்ந்தெடுத்த அணியில் ரிஷப் பந்துக்கு இடமில்லையா?

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தேர்ந்தெடுத்த டி20 உலக கோப்பை அணியில் ரிஷப் பந்த் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

DIN

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தேர்ந்தெடுத்த டி20 உலக கோப்பை அணியில் ரிஷப் பந்த் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னாப்பிரிகாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிஷப் பந்தின் மோசமான பேட்டிங் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியிருப்பதாவது: 

ஆஸ்திரேலியாவில் பொதுவாக பந்து வேகமாகவும் ஸ்விங் ஆகியும் வருவதால் வலுவான தொடக்கம் தேவை. இதற்கு உங்களுக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. கோலி இப்போது சரியாக விளையாடாவிட்டாலும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவார். 

இர்பான் பதான் தேர்ந்தெடுத்த டி20 உலக கோப்பைக்கான 11பேர் கொண்ட அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT