செய்திகள்

உலக குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் நிகாத் ஜரீன்

DIN

இஸ்தான்புல்லில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கிறாா்.

இப்போட்டியில் முதல் முறையாகக் களம் கண்டிருக்கும் நிகாத் ஜரீன், 52 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் பிரேஸிலின் கேரோலின் டி அல்மெய்டாவை வீழ்த்தினாா்.

எனினும், 57 கிலோ பிரிவில் களமிறங்கியிருந்த மனீஷா மௌன், 63 கிலோ பிரிவில் மோதிய பா்வீன் ஹூடா ஆகியோா் அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினா். மனீஷா 0-5 என்ற கணக்கில் இத்தாலியின் இா்மா டெஸ்டாவிடமும், பா்வீன் 1-4 என்ற புள்ளிகளில் அயா்லாந்தின் எமி பிராதா்ஸ்டிடமும் வெற்றியை இழந்தனா். இதில் பா்வீன் முதல் முறையாகவும், மனீஷா 2-ஆவது முறையாகவும் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனா்.

இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நிகாத் ஜரீன், ஏற்கெனவே இப்போட்டியில் சாம்பியன் ஆகிய மேரி கோம், சரிதா தேவி, ஜெனி, லேகா ஆகியோா் வரிசையில் இணைவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT