முகப்பு
செய்திகள்

சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது எப்படி?: ஹைலைட்ஸ் விடியோ

பிபிஎல் டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்துள்ளது. 

Updated On : 17 டிசம்பர் 2022, 11:24 am IST
பகிர்:

பிபிஎல் டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்துள்ளது. 

சிட்னியில் நடைபெற்ற பிபிஎல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி, முதல் ஓவரிலிருந்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. 5.5 ஓவர்களில் அதாவது 35 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் 15 ரன்களுக்கு இழந்து பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஹென்றி தார்ன்டன் 5 விக்கெட்டுகளையும் வேஸ் அகர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 5 பேட்டர்கள் டக் அவுட் ஆனார்கள். சிட்னி பேட்டர் டாக்கெட் அதிகபட்சமாக 4 ரன்கள் எடுத்தார். 

டி20 கிரிக்கெட்டில் வேறு எந்த அணியும் இதுபோல குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததில்லை. இதற்கு முன்பு 2019-ல் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் துருக்கி அணி, செக் குடியரசுக்கு எதிராக 21 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது டி20 வரலாற்றில் குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணியாக சிட்னி தண்டர் உள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments