முகப்பு
செய்திகள்

2022-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்!

2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.

Updated On : 26 டிசம்பர் 2022, 11:11 am IST
பகிர்:

2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.

28 வயது ஷ்ரேயஸ் ஐயர், இந்திய அணிக்காக 7 டெஸ்டுகள், 39 ஒருநாள், 49 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். வங்கதேசத்துகு எதிரான டெஸ்ட் தொடரில் 86(192), 87(105) & 29*(46) என மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணி 2-0 என முழுமையாக வெல்ல உதவினார்.

2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் 1609 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். டெஸ்டுகளில் 422 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 724 ரன்களும் டி20யில் 463 ரன்களும் எடுத்துள்ளார். 

Advertisement

2011 முதல் ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

2011: கோலி (1644)
2012: கோலி (2186)
2013: கோலி (1913)
2014: கோலி (2286)
2015: ரஹானே (1352)
2016: கோலி (2595)
2017: கோலி (2818)
2018: கோலி (2735)
2019: கோலி (2455)
2020: ராகுல் (847)
2021: ரோஹித் சர்மா (1420)
2022: ஷ்ரேயஸ் ஐயர் (1609)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.