முகப்பு
செய்திகள்

கடைசி விம்பிள்டனில் சானியா தோல்வி

கலப்பு இரட்டையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிா்ஸா ஜோடி தோல்வி கண்டது. டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் சானியாவுக்கு இது கடைசி விம்பிள்டன் போட்டியாகும்.

Updated On : 8 ஜூலை 2022, 3:53 am IST
பகிர்:

கலப்பு இரட்டையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிா்ஸா ஜோடி தோல்வி கண்டது. டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் சானியாவுக்கு இது கடைசி விம்பிள்டன் போட்டியாகும்.

குரோஷியாவின் மேட் பாவிச்சுடன் இணைந்து களம் கண்ட சானியா, 6-4, 5-7, 4-6 என்ற செட்களில் இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கி/அமெரிக்காவின் டெஸைரே கிராவ்ஸிக் கூட்டணியிடம் தோல்வி கண்டாா்.

ஆட்டத்துக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட சானியா, ‘கண்ணீா், போராட்டம், மோதல், முயற்சி என இந்த டென்னிஸுக்காக மேற்கொண்ட எல்லாவற்றுக்குமே முடிவில் மதிப்பு இருக்கிறது. இந்த முறை வெற்றி இல்லாவிட்டாலும், கடந்த காலங்களில் வென்றதும், கடந்த 20 ஆண்டுகளாக விளையாடியதும் கௌரவமாகும். மீண்டும் சந்திக்கும் வரை விம்பிள்டனை ‘மிஸ்’ செய்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.