முகப்பு
செய்திகள்

உலக வாள்வீச்சு: பவானி தேவி போராடி தோல்வி

எகிப்தில் நடைபெறும் உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

Updated On : 21 ஜூலை 2022, 2:01 am IST
பகிர்:

எகிப்தில் நடைபெறும் உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இப்போட்டியில் சீனியா் மகளிா் தனிநபா் சப்ரே பிரிவில் களம் கண்ட பவானி தேவி, முதல் சுற்றில் 15-14 என்ற கணக்கில் கனடாவின் கேப்ரியேலா பகேவை வீழ்த்தினாா். என்றாலும், 2-ஆவது சுற்றில் ஜொ்மனியின் லாரிசா எய்ஃப்லரிடம் 12-15 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தாா்.

தமிழரான பவானி தேவி, கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று, ஒலிம்பிக்கில் தடம் பதித்த முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா். அந்தப் போட்டியில் அவா் முதல் சுற்றில் வென்று, 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments