முகப்பு
செய்திகள்

‘கருப்பு வெள்ளை’ நேப்பியர் பாலத்தை நேரில் கண்டுகளித்த பிரக்ஞானந்தா (படங்கள்)

சென்னை நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளைக் கட்டங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

Updated On : 21 ஜூலை 2022, 12:24 pm IST
பகிர்:

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளைக் கட்டங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் கருப்பு வெள்ளை நேப்பியர் பாலம், சென்னையில் அனைவரையும் ஈர்க்கும் ஓர் இடமாக மாறியிருக்கிறது. பலரும் அங்குச் சென்று செல்ஃபி, விடியோ எடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நேப்பியர் பாலம் உள்ள பகுதிக்குத் தனது குடும்பத்தினருடன் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். இத்தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் ஒரு செஸ் வீராங்கனை. அவரும் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறார். 

இந்த வருடம் மூன்று போட்டிகளை வென்ற பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் கார்ல்சனை இருமுறை வீழ்த்தியுள்ளார். சென்னை ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பி அணியில் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ளார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments