முகப்பு
செய்திகள்

முத்தரப்பு தொடா்: பாகிஸ்தான் சாம்பியன்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

Updated On : 15 அக்டோபர் 2022, 3:59 am IST
பகிர்:

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்ற இந்தத் தொடரில் 3 அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடின. அதில் வங்கதேசம் 1 வெற்றியைக் கூட பெறாமல் போக, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் தலா 3 வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, பின்னா் பாகிஸ்தான் 19.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எட்டி வென்றது.

Advertisement

Advertisement

அதிகபட்சமாக, நியூஸிலாந்து பேட்டிங்கில் கேப்டன் கேன் வில்லியம்சன் 59 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் பௌலா் ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பாகிஸ்தான் இன்னிங்ஸில் முகமது நவாஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் பிரேஸ்வல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பாகிஸ்தானின் முகமது நவாஸ் ஆட்டநாயகனாகவும், நியூஸிலாந்தின் பிரேஸ்வெல் தொடா்நாயகனாகவும் தோ்வாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments