கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
டாஸ் வென்ற ஆஸி. பௌலிங் செய்து வருகிறது. இந்திய அணி 29 ஓவர் முடிவில் 149/4 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி-கே.எ.ராகுல் இணை பொறுப்பாக விளையாடி இந்திய அணியை தோல்வியில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள்.
இதையும் படிக்க: ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்!
இந்தப் போட்டியில் விராட் கோலி 25.1 ஓவரில் தனது 72வது அரைசதத்தினை அடித்து அசத்தினார். 28.2 வது ஒவரில் விராட் கோலி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதையும் படிக்க: இறுதிப் போட்டியில் வான வேடிக்கை!
உலகக் கோப்பையில் தொடர்ந்து 5 முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2015இல் ஸ்டீவ் ஸ்மித் இதை செய்திருக்கிறார். 2019இல் விராட் கோலியும் இதை ஏற்கனவே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.