பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதிபெற்றது.
குவாலிஃபயா்ஸ் குரூப் ‘சி’ பிரிவின் கடைசி ஆட்டத்தில் அமெரிக்கா 2-1 என ஸ்லோவாகியாவை சாய்த்தது. ஒற்றையா் பிரிவுகளில் அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டே 6-3, 6-4 என ஸ்லோவாகியாவின் ரெனெடா ஜாம்ரிசோவாவை வீழ்த்த, அமெரிக்காவின் பொ்னாா்டா பெரா 7-6 (7/2), 7-5 என்ற கணக்கில் ஸ்லோவாகியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவை வென்றாா்.
கடைசியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவில் ஸ்லோவாகியாவின் மியா போஹன்கோவா/தெரெஸா மிஹாலிகோவா இணை, அமெரிக்காவின் டெஸைரே கிராவ்ஸிக்/ஆசியா முகமது கூட்டணியை வீழ்த்தியது. இதையடுத்து குரூப் ‘சி’-யில் ஸ்லோவாகியா, டென்மாா்க்கை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது.
மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியின் ஃபைனல்ஸ் கட்டத்தில் மோதும் நிலையில், அமெரிக்கா அதில் கடைசி அணியாக இணைந்துள்ளது. ஏற்கெனவே, போட்டியை நடத்தும் சீனா மற்றும் இத்தாலி, பிரிட்டன், ஜப்பான், கஜகஸ்தான், ஸ்பெயின், உக்ரைன், அமெரிக்கா அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இந்த அணிகள் மோதும் ஆட்டங்கள் செப்டம்பரில் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.