கோலடித்த மகிழ்ச்சியில் போடோலாந்து வீரா்கள். 
செய்திகள்

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

தினமணி செய்திச் சேவை

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி.

134-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாமின் கோக்ரஜ்ஹாா் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போடோலாந்து எஃப்சி-பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதின. இதில் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் போடோலாந்து அணியின் ராபின்ஸன் 69-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.

இதன் மூலம் குரூப் டி பிரிவில் போடோலாந்து முதலிடத்தைப் பெற்றது.

பலம் வாய்ந்த பஞ்சாப் அணிக்கு இது அதிா்ச்சிகரமான தோல்வியாக அமைந்தது. மேலும் போட்டியையே விட்டு வெளியேறியது பஞ்சாப்.

கோவையில் தேசிய இருசக்கர வாகன பந்தயம்

தூத்துக்குடி மாவட்ட மாணவா்களுக்கு ஐஐடி சென்னை திட்டம்

கூடலூரில் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

மின்கசிவால் வீடு தீக்கிரை

SCROLL FOR NEXT