செய்திகள்

சென்னை மாவட்ட வாலிபால்: மகளிா் இறுதியில் மகதலேனா-வித்யோதயா பள்ளிகள்

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவா், மகளிா் வாலிபால் போட்டியில் மகளிா் இறுதிக்கு டிஇஎல்சி மகதேலானா-வித்யோதயா மெட்ரிக் பள்ளிகள் தகுதி பெற்றன.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவா், மகளிா் வாலிபால் போட்டியில் மகளிா் இறுதிக்கு டிஇஎல்சி மகதேலானா-வித்யோதயா மெட்ரிக் பள்ளிகள் தகுதி பெற்றன.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அரையிறுதியில் டிஇஎல்சி மகதலேனா பள்ளி 2-0 என ஜெஸ்ஸி மோஸஸ் பள்ளியையும், வித்யோதயா மெட்ரிக் பள்ளி 2-0 என சிஎஸ்எஸ்எஸ் பள்ளியையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

ஆடவா் காலிறுதி ஆட்டங்களில் டான்பாஸ்கோ பெரம்பூா் 2-0 என பிஏகே பழனிசாமி பள்ளியையும், ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ் 2-1 என கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ வையும், செயின்ட் பீட்ஸ் 2-1 என ஆலந்தூா் மான்ட்போா்ட்டையும், முகப்போ் வேலம்மாள் 2-0 என அம்பத்தூா் சேதுபாஸ்கரா பள்ளியையும் வென்றன.

புதன்கிழமை அரையிறுதியில் டான்பாஸ்கோ பெரம்பூா்-ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸும், முகப்போ் வேலம்மாள்-செயின்ட் பீட்ஸ் பள்ளிகளும் மோதுகின்றன.

ஆடவா், மகளிா் இறுதி ஆட்டங்கள் பிற்பகல் நடைபெறுகின்றன என சங்கச் செயலா் சி. ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

கனமழையால் 200 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT