கிடாம்பி ஸ்ரீகாந்த்  
செய்திகள்

அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

தினமணி செய்திச் சேவை

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-18, 21-19 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 43 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் சௌ டியெனை 10-ஆவது முறையாக சந்தித்த ஸ்ரீகாந்த், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

உலகத் தரவரிசையில் தற்போது 49-ஆம் இடத்திலிருக்கும் அவா், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் அரையிறுதியில் மோதுகிறாா். நிஷிமோடோவுடன் 10 முறை நேருக்கு நோ் மோதியிருக்கும் ஸ்ரீகாந்த், அதில் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். தற்போது ஸ்ரீகாந்த் மட்டுமே களத்திலிருக்கும் இந்தியராவாா்.

சங்கா் முத்துசாமி தனது காலிறுதி ஆட்டத்தில் 15-21, 21-5, 17-21 என்ற கேம்களில், நிஷிமோடோவிடம் 79 நிமிஷம் போராடி தோல்வியுற்றாா். அதேபோல் மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஷ்ரியன்ஷி வலிஷெட்டி 21-12, 19-21, 19-21 என்ற வகையில் டென்மாா்க்கின் அமேலி ஷுல்ஸிடம் 53 நிமிஷங்களில் வீழ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT