காலிறுதியில் நிகாத் ஜரீன்
இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.
இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.
மகளிா் 51 கிலோ எடைப் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா் 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் யுனா நிஷினகாவை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் நிகாத், ஒலிம்பிக்கில் இருமுறை வெள்ளி வென்றவரான துருக்கியின் புசே நஸ் காகிரோக்லுவை எதிா்கொள்கிறாா்.
இதனிடையே, ஆடவா் பிரிவில் 3 இந்தியா்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறினா். 75 கிலோ பிரிவில் சுமித் குண்டூ 0-5 என நடப்பு ஐரோப்பிய சாம்பியனான பல்கேரியாவின் ரமி கிவானிடம் தோற்க, 60 கிலோ பிரிவில் சச்சின் சிவச் 1-4 என கஜகஸ்தானின் பிபாா்ஸ் ஜெஸெனிடம் தோல்வியுற்றாா்.
Advertisement
Advertisement
90+ கிலோ பிரிவில் நரேந்தா் பொ்வால் 1-4 என இத்தாலியின் டியேகோ லென்ஸியால் சாய்க்கப்பட்டாா். தற்போதைய நிலையில் களத்திலிருந்த 20 இந்தியா்களில், சுமாா் பாதிபோ் தோற்று வெளியேறிவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.