ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் காலிறுதியில் வென்ற இந்திய வீராங்கனை சிந்து குறித்து...
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றுமொரு இந்திய வீராங்கனை தன்வி சர்மா காலிறுதியில் தோல்வியுற்று வெளியேறினார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிவி சிந்து 22-20, 21-12 என்ற நேர் கேம்களில் மற்றுமொரு இந்திய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்னிஸ் மகளிர் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் பிவி சிந்து காலிறுதிப் போட்டியில் சீன தைபேயின் சென் சூ யுவுடன் மோதினார். இந்தப் போட்டியில் 27 நிமிஷங்களில் பிவி சிந்து 21-6, 21-9 என நேர் கேம்களில் வென்றார்.
Advertisement
Advertisement
மூன்றாவது தரவரிசையில் இருக்கும் ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் பிவி சிந்து அரையிறுதியில் இந்திய நேரப்படி நாளை (ஜூன் 12) காலை 5.30 மணிக்கு மோதுகிறார்.
அகானே யமகுச்சியுடன் பிவி சிந்து இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 - 13 என்ற சிறப்பான வெற்றியை பிவி சிந்து தன்வ்சம வைத்திருக்கிறார்.
அகானே யமகுச்சி தன்வி சர்மாவை 21-14, 21-14 என்ற கேம்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சையது மோடி கோப்பைக்குப் பிறகு (2024) பிவி சிந்து தனது கோப்பைக் கனவு தாமதமாகிக் கொண்டே வருகிறது.