பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து இந்தியாவிலேயே முதல் வீராங்கனையாக 500 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக அளவில் பிவி சிந்து ஆறாவது வீராங்கனையாக இந்த மைல்கல்லை எட்டி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
500 வெற்றிகள் பெற்ற முதல் இந்திய வீராங்கனை
இந்தோனோசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் டென்மார்கின் க்ஜேர்ஸ்ஃபெல்ட் உடன் பிவி சிந்து மோதினார்.
சுமார் 43 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-19, 21-18 என்ற கேம் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை பிவி சிந்து வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனை சென் யூஃபி உடன் காலிறுதியில் மோதுகிறார்.
பிவி சிந்து தான் விளையாடிய 732 மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் 500-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனைக்கு தெலங்கானா முதல்வர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தெலங்கானா முதல்வர் வாழ்த்து
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாக சிஎம்ஓ தெலங்கானா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிவி சிந்துவின் வரலாற்றுச் சாதனைக்கு தெலங்கானா முதல்வர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
பிவி சிந்துவின் விடாது தொடர்கிற அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, இந்திய பாட்மின்டனில் அவரது வியக்கத்தக்க பங்களிப்பு, நாட்டிற்கே பெருமைச் சேர்க்கும் விதமாக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பிவி சிந்துவின் வெற்றி தொடரட்டும் என்றும் அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல சாதனைகள் பெறவும் முதல்வர் வாழ்த்தியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
Summary
Badminton player PV Sindhu has created a record by becoming the first Indian female player to win 500 matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டிக்கான இந்திய பாட்மின்டன் அறிவிப்பு: பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் பங்கேற்பு

அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து..! கோப்பைக்கான காத்திருப்பு 2 ஆண்டுகளாக நீடிப்பு!
ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!

தாய்லாந்து ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து, லக்ஷயா சென், சாத்விக் - சிராக்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




