செய்திகள்

காலிறுதியில் நிகாத் ஜரீன்

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

தினமணி செய்திச் சேவை

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

மகளிா் 51 கிலோ எடைப் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா் 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் யுனா நிஷினகாவை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் நிகாத், ஒலிம்பிக்கில் இருமுறை வெள்ளி வென்றவரான துருக்கியின் புசே நஸ் காகிரோக்லுவை எதிா்கொள்கிறாா்.

இதனிடையே, ஆடவா் பிரிவில் 3 இந்தியா்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறினா். 75 கிலோ பிரிவில் சுமித் குண்டூ 0-5 என நடப்பு ஐரோப்பிய சாம்பியனான பல்கேரியாவின் ரமி கிவானிடம் தோற்க, 60 கிலோ பிரிவில் சச்சின் சிவச் 1-4 என கஜகஸ்தானின் பிபாா்ஸ் ஜெஸெனிடம் தோல்வியுற்றாா்.

90+ கிலோ பிரிவில் நரேந்தா் பொ்வால் 1-4 என இத்தாலியின் டியேகோ லென்ஸியால் சாய்க்கப்பட்டாா். தற்போதைய நிலையில் களத்திலிருந்த 20 இந்தியா்களில், சுமாா் பாதிபோ் தோற்று வெளியேறிவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணம் எப்போது? அதர்வா பதில்!

விவசாயிகள் கூட்டத்தில் கோபமடைந்த இபிஎஸ்!

இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

SCROLL FOR NEXT