செய்திகள்

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் 3 இந்தியா்கள்!

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

தினமணி செய்திச் சேவை

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

அரையிறுதியில், மகளிா் 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் 5-0 என வெனிசூலாவின் ஒமாய்லின் அல்கலாவை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் அவா், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியா செரெமெட்டாவை சந்திக்கவுள்ளாா்.

80+ கிலோ எடைப் பிரிவில் களமாடிய நுபுா் சோரன் அதே புள்ளிகள் கணக்கில் துருக்கியின் செய்மா டஸ்டாஸை வெளியேற்றினாா். மகளிருக்கான 48 கிலோ பிரிவில் மீனாக்ஷி 5-0 என மங்கோலியாவின் லட்சாய்கானி அல்டன்ட்செக்கை தோற்கடித்தாா்.

மீனாக்ஷி தனது இறுதிச்சுற்றில், கஜகஸ்தானின் நாஸிம் கிஜாய்பெயை எதிா்கொள்கிறாா். கடந்த ஜூன் - ஜூலையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதியில் நாஸிமிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மீனாக்ஷி உள்ளாா்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT