ஹாங் காங் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக்! இந்த சீசனில் முதல்முறை!
ஹாங் காங் ஓபனில் இறுதிக்கு முன்னேறிய இந்தியர்கள் குறித்து...
ஹாங் காங் ஓபன் அரையிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் சாத்விக் - சிராக் இணையினர் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தாண்டில் முதல்முறையாக இவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் ஓபன் பாட்மின்டன் ஆடவர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியரகள் சாத்விக் - சிராக் கூட்டணி, தைபேவின் பிங்-வீ லின் - சென் செங் கு பிரஸ் கூட்டணியுடன் மோதினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 21-17, 21-15 என்ற நேர் கேம்களில் வென்றனர். இந்த சீசனில் 6 முறை அரையிறுதியில் தோற்ற சாத்விக் - சிராக் இணையர்கள் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
சாத்விக் - சிராக் இணையர் 2024ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபனில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கிற்குப் பிறகு சாத்விக் முழங்கை பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரியில் அவரது தந்தை இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
India's star men's doubles pair Satwiksairaj Rankireddy and Chirag Shetty ended a long wait for a title shot this year, storming into the final of the Hong Kong Open Super 500 with a straight-game win on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.