முகப்பு
செய்திகள்

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் அணிகள் அறிவிப்பு

Updated On : 2 ஏப்ரல், 2026 at 10:39 PM
நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் (ஐஜிபிஎல்) அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் அணிகளை அறிவித்தனா்.

கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஐஜிபிஎல் நடத்தப்படுகிறது. நிகழாண்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

அறிமுக நிகழ்வுக்கு ஐஜிபிஎல் சிஇஓ உத்தம் சிங் முன்டி தலைமை வகித்தாா். இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோல்ஃப் மைதானங்களில் இத்தொடா் நடைபெறும்.

இதன் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு கிடைக்கும். கோல்ஃப் தொழில்முறை வீரா்கள் அதிகளவில் உருவாகும் வாய்ப்புள்ளது என அமைச்சா் ஷெகாவத் தெரிவித்தாா்.

2026 சீசனில் மொத்தம் 15 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 10 நிகழ்வுகள் இத்தியாவிலும், மீதமுள்ள சா்வதேச அளவிலும் நடைபெறும்.

ஒவ்வொரு அணியிலும் 4 வீரா்கள் இடம் பெறுவா். மொத்தம் ரூ.1.5 கோடி பரிசுத் தொகை உள்ளது.

புள்ளிகளின் அடிப்படையில் முதல் 3 அணிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படும்.