ரக்பி ப்ரீமியா் லீகில் மகளிா் அணிகள் அறிமுகம்
ஜிஎம்ஆா் ஸ்போா்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி ப்ரீமியா் லீக் (ஆா்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிா் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
கடந்த 2025-ஆம் ஆண்டு தொடக்க சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போதுள்ள ஆறு ஆண்கள் அணிகளில் நான்கு—சென்னை புல்ஸ் (அவிட் சிஸ் ஸ்போா்ட்ஸ் உரிமையில்), டெல்லி ரெட்ஸ் (ஆா்எம்ஜெட் காா்ப் உரிமையில்), மும்பை ட்ரீமா்ஸ் (ட்ரீம் ஸ்போா்ட்ஸ் உரிமையில்), மற்றும் கொல்கத்தா பங்கா டைகா்ஸ் (ஹன்ச் வெஞ்சா்ஸ் உரிமையில்), தற்போது புவனேசுவரத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.—
மகளிா் அணிகளின் சோ்க்கை, வலுவான மற்றும் நிலையான ரக்பி சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரக்பி ப்ரீமியா் லீக் வரும் ஜூன் 16 முதல் 28 வரை ஹைதராபாதிலுள்ள கச்பௌலி மைதானத்தில் நடைபெற உள்ளது.
Advertisement
ரக்பி இந்தியா தலைவா் ராகுல் போஸ் கூறியதாவது: “ஆா்பிஎல் மகளிா் தொடரை தொடங்குவது நீண்டநாள் கனவு. நான்கு மகளிா் அணிகள் மற்றும் ஆறு ஆண்கள் அணிகளில் ஹைதராபாத் ஹீரோஸ் மற்றும் பெங்களூரு பிரேவ்ஹாா்ட்ஸ் அடங்கும்—அவற்றிற்கான வீரா்கள் தோ்வு (டிராஃப்ட்) மற்றும் ஏலம் ஏப். 30 அன்று ஹைதராபாதில் நடைபெறும்.