வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!
மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி நிகழ்த்திய சாதனை குறித்து...
இங்கிலாந்தில் நடைபெறும் எஃப்ஏ கோப்பையில் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வரலாறு படைத்துள்ளது. அரையிறுதியில் வென்ற இந்த அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
எஃப்ஏ கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அணி தொடர்ச்சியாக நான்குமுறை இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி வரலாறு படைத்துள்ளது.
இங்கிலாந்தின் முக்கியமான கால்பந்து அணியாக மான்செஸ்டர் சிட்டி அணி இருக்கிறது. இந்த அணி எஃப்ஏ கோப்பை அரையிறுதியில் சௌத்தாம்டன் அணியுடன் மோதியது.
Advertisement
இந்தப் போட்டியில் 79ஆவது நிமிஷத்தில் சௌத்தாம்டன் அணி கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தது. இதில் டோகு 82ஆவது நிமிஷத்திலும் நிகோ கொன்ஸாலே 87ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள்.
இறுதியில் 2-1 என மான்செஸ்டர் சிட்டி வென்றது. ஆர்செனலை விட 3 புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளதால் பிரீமியர் லீக்கிலும் இந்த அணி கோப்பை வெல்ல வாய்ப்பிருக்கிறது.