முகப்பு
செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை: 20 பேருடன் இந்திய அணி!

மங்கோலியாவில் மாா்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 20 பேருடன் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:43 PM
பகிர்:

மங்கோலியாவில் மாா்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 20 பேருடன் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் 10 வீரா்கள், 10 வீராங்கனைகள் அடங்குவா். ஜனவரியில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்புக்குப் பிறகு, தேசிய அளவிலான தோ்வு முகாம் நடத்தப்பட்டு அதனடிப்படையில் வீரா், வீராங்கனைகள் இப்போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அணி விவரம்:

ஆடவா்: விஸ்வநாத் சுரேஷ் (50 கிலோ), ஜடுமானி சிங் (55 கிலோ), சச்சின் (60 கிலோ), ஆதித்யா பிரதாப் (65 கிலோ), தீபக் (70 கிலோ), ஆகாஷ் (75 கிலோ), அங்குஷ் (80 கிலோ), லோகேஷ் (85 கிலோ), ஹா்ஷ் சௌதரி (90 கிலோ), நரேந்தா் (90+ கிலோ).

மகளிா்: மீனாக்ஷி (48 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), பிரீத்தி (54 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), பிரியா (60 கிலோ), அங்குஷிதா போரோ (65 கிலோ), அருந்ததி சௌதரி (70 கிலோ), லவ்லினா போா்கோஹெய்ன் (75 கிலோ), பூஜா ராணி (80 கிலோ), அல்ஃபியா பதான் (80+ கிலோ).

முழு கட்டுரையைப் படிக்க →