ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் அசத்தல்
தாஷ்கன்ட்: உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 15 & 17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்திய மகளிர் அரையிறுதிக்கு முன்னேறி 12 பதக்கங்களை வியாழக்கிழமை உறுதி செய்தனர்.
காலிறுதியில் 46 கிலோ பிரிவில் ராக்கி 5}0 என, சீன தைபே வீராங்கனையை வெல்ல, 48 கிலோ பிரிவில் குஷி "ஆர்எஸ்சி' முறையில் தென் கொரிய வீராங்கனையைச் சாய்த்தார்.
அதேபோல் 52 கிலோ பிரிவில் மம்தாவும் "ஆர்எஸ்சி' முறையில் ஜோர்டான் வீராங்கனையை வீழ்த்த, லக்ஷ்மி 54 கிலோ பிரிவில் ஆர்எஸ்சி முறையில் மங்கோலியாவையும், நவ்யா 57 கிலோ பிரிவில் 5-0 என சீன தைபேவையும் சாய்த்தனர்.
Advertisement
60 கிலோ பிரிவில் இஷிகா ஆர்எஸ்சி முறையில் மங்கோலியாவை தோற்கடிக்க, ஹர்னூர் 66 கிலோ பிரிவிலும், ஹிமான்ஷி 70 கிலோ பிரிவிலும் ஆர்எஸ்சி முறையில் சீன தைபே போட்டியாளர்களை தோற்கடித்தனர். 75 கிலோ பிரிவில் ஜோதி எதிர்கொண்ட துர்க்மெனிஸ்தான் போட்டியாளர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், ஜோதி வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
80+ கிலோ பிரிவில் குர்சீரத் 4-0 என கஜகஸ்தான் போட்டியாளரை வெல்ல, ஒரே தோல்வியாக 50 கிலோ பிரிவில் ஓவி 2-3 என உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோற்றார். இதனிடையே ஆடவருக்கான 44-46 கிலோ பிரிவில் நரேந்திர குமார் நெல்லா "ஆர்எஸ்சி' முறையில் ஜோர்டன் வீரரை சாய்த்தார்.