முகப்பு
செய்திகள்

அரையிறுதியில் வென்ற ரியல் மாட்ரிட்..! இறுதிப் போட்டியில் பார்சிலோனாவுடன் பலப்பரீட்சை!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டி குறித்து...

Updated On : 9 ஜனவரி 2026, 4:39 pm IST
பந்தை தன் வசப்படுத்தும் முயற்சியில் ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி அத்லெடிகோ மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தியது.

இதன்மூலம், இறுதிப் போட்டியில் பார்சிலோனாவுடன் ரியல் மாட்ரிட் மோதுகிறது.

சௌதி அரேபியாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி அத்லெடிகோ மாட்ரிட் அணி மோதின.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியின் 2-ஆவது நிமிஷத்திலேயே ரியல் மாட்ரிட் அணியின் வல்வெர்டே ஃப்ரீ கிக்கில் அசத்தல் கோல் அடித்தார்.

ரோட்ரிகோ 55-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க 2-0 என ரியல் மாட்ரிட் முன்னிலை வகித்தது.

இதற்கடுத்து அத்லெடிகோ மாட்ரிட் 58-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்து 1-2 என தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் 51 சதவிகித பந்தினை தன்வசம் வைத்திருந்த அத்லெடிகோ மாட்ரிட் 6 முறை இலக்கை நோக்கி அடித்தும் பயனில்லாமல் சென்றது.

கடந்த செப்டம்பரில் அத்லெடிகோ லாலிகா தொடரில் ரியல் மாட்ரிட்டை 5-2 என வீழ்த்தி இருந்தார்கள். அதனால், இந்த வெற்றி ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

இறுதிப் போட்டி வரும் ஜன. 12ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

கடந்த முறை இதே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 5-2 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதனால், இந்தமுறை எல் - கிளாசிக்கோ போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

summary

Real Madrid got goals from Federico Valverde and Rodrygo to beat Atletico Madrid 2-1, setting up a clasico final at the Spanish Super Cup played in Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments