முகப்பு
செய்திகள்

இண்டியன் வெல்ஸ்: முதல்முறையாக பட்டம் வென்ற சின்னர், சபலென்கா!

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பட்டம் வென்ற சின்னர், சபலென்கா குறித்து...

Updated On : 16 மார்ச் 2026, 4:00 pm IST
முதல்முறையாக இண்டியன் வெல்ஸ் பட்டம் வென்ற சின்னர், சபலென்கா. - படங்கள்: ஏபி
பகிர்:

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக யானிக் சின்னர், அரினா சபலென்கா பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள்.

முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர் பட்டம் வென்று தனது ஆதிக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் - யானின் சின்னர் மோதினார்கள். இந்தப் போட்டியில் 7-6 (6), 7-6 (4) என்ற செட்களில் சின்னர் போராடி வென்றார்.

Advertisement

Advertisement

இதுவரை 10 முறை இருவரும்போத, 9ஆவது முறையாக சின்னர் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். கலிஃபோர்னியா பாலைவன தொடர் என அழைக்கப்படும் இண்டியன் வெல்ஸ் தொடரில் முதல்முறையாக பட்டம் வென்றுள்ளார்.

அரையிறுதியில் மெதவ்தேவ் உலகின் நம்.1 வீரரான அல்கராஸை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டிக்குப் பிறகு சின்னர், “டென்னிஸ் மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் இத்தாலிக்கு சிறப்பான நாள்” எனக் கூறியிருந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிசில் அரினா சபலென்கா 3-6, 6-3, 7-6 (6) என்ற செட்களில் எலேனா ரைபாகினாவுடன் வென்றார். இது சபலென்காவின் முதல் இண்டியன் வெல்ஸ் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2023, 2025ஆம் ஆண்டில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற சபலென்கா இந்தமுறை பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்தப் போட்டியின்போது வெப்பநிலை 90 ஃபாரன்ஹீட் வரைச் சென்றதும் கவனிக்கத்தக்கது.

போட்டிக்குப் பிறகு சபலென்கா, “இந்தத் தொடரில் என்ன ஆனாலும் மனதை திடமாக வைத்துக்கொள்ள வேண்டுமென இருந்தேன். அந்தப் போராட்ட குணம்தான் என்னை இங்கு நிறுத்தி இருக்கிறது” என்றார்.

summary

Jannik Sinner, Aryna Sabalenka claim their first titles at Indian Wells.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments