என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான்: பிரக்ஞானந்தா
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான் என்று தெரிவித்தது பற்றி...
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான் என்று தெரிவித்துள்ளார்.
நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
இது குறித்து பிரக்ஞானந்தா பேசியதாவது:
Advertisement
Advertisement
என் வாழ்வின் மிகப்பெரிய வெற்றியாக இதை நான் பார்க்கிறேன். மேலும், சராசரி மதிப்பீட்டு அளவிலும் இது வலுவானது. எனவே, இந்த வெற்றி மிகவும் சிறப்பாக அமைந்தது. மேக்னஸும் அங்கு இருந்தார். அவரும் தொடர்ந்து, நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். ஆகவே, இந்த வெற்றி என்னுடைய பட்டியலில் முன்னணியில் இருக்கும்.
சோ மற்றும் அலிரேஸா இடையேயான போட்டி சமனில் முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இருப்பினும், கெய்மருக்கு எதிராக நான் வெற்றிபெற்றே ஆக வேண்டிய சூழல் நிலவியது.
நான் முன்பே சொன்னது போல, குறிப்பாக எதையும் மாற்ற நினைக்கவில்லை. ஆனால் வேகமாக விளையாட வேண்டும் என்ற முயற்சி, என் ஆட்டங்களில் நிச்சயமாக உதவியது என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலான ஆட்டங்களில் என்னுடைய சக போட்டியாளர்களை விட எனக்கு அதிக நேரம் கிடைத்தது.
இங்கே விளையாடும் பெரும்பாலான வீரர்கள், உலக டீம் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இருப்பார்கள். மேலும் அது இன்னும் 10 நாள்களில் தொடங்கவிருக்கிறது. ஆனால், சிறிது காலத்துக்கு செஸ் விளையாடுவதைப் பற்றி நான் யோசிக்க மாட்டேன்.
ஒட்டுமொத்தத்தில் இந்த வெற்றி கிடைத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்தார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.
Tamil Nadu player Praggnanandhaa, who won the championship title at the Norway Chess tournament, has stated that this is the biggest victory of his life.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.