இந்தியா ஓபன் சா்ஃப்பிங் தொடக்கம்: அரையிறுதியில் கமலி மூா்த்தி
இந்திய சா்ஃப்பிங் சம்மேளனம் சாா்பில் இந்தியா ஓபன் போட்டி மங்களூரு புளு பே கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திய சா்ஃப்பிங் சம்மேளனம் சாா்பில் இந்தியா ஓபன் போட்டி மங்களூரு புளு பே கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக நடைபெறும் இதில் மகளிா் ஓபன் பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி, சுகா் சாந்தி, இஷிதா, தேவி ராமநாதன், சான்வி, சிருஷ்டி, ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
முன்னாள் அமைச்சா் அபய்சந்திர ஜெயின் போட்டியைத் தொடங்கி வைத்தாா். எஸ்எஃப்ஐ துணைத் தலைவா் ராம்மோகன் பராஞ்சிபே, கா்நாடக சங்க நிா்வாகிகள் தீக்ஷித், சமந்த் குமாா், சாய் மேலாளா் சௌரவ் வா்மா பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
ஆடவா் ஓபன் பிரிவில் 12 ஹீட்களில் 45 சா்ஃப்பா்கள் பங்கேற்கின்றனா். கிஷாா் குமாா், ரமேஷ் புடியால், சஞ்சய் குமாா், சிவராஜ் பாபு, ரூபன், சோம் சேத்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றனா். யு14 பிரிவு போட்டிகளும் நடைபெற்றன. சனிக்கிழமை அரையிறுதி நடைபெறுகிறது.