பழமொழி: நானூறு: முன்றுறையரையனார்
வளமையும் தேசும் வலியும் வனப்பும்இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவாமதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் கூற்றம்
வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவா
மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் கூற்றம்
குதித்துய்ந்து அறிவாரோ இல். (பாடல்-183)
செல்வத்தால் வரும் வளமையும், புகழும், வலிமையும், வனப்பும், இளமையும், குடிப்பிறப்பும் இவையெல்லாம் உள்ளனவாக மதித்து, அதற்கு அஞ்சி தன் செயலைக் கைவிட்டுப் போகும் தன்மை, கூற்றத்திற்குக் கிடையாது. அதன் பிடியினின்றும் தப்பிப் பிழைத்தவர்கள் ஒருவருமே இலர். இவை எல்லாம் சாவினை வெல்லும் சக்தி உடையன அன்று. அதனால், நல்ல நெறியிலே செல்க என்பது கருத்து. "கூற்றம் குதித்துய்ந்து அறிவாரோ இல்' என்பது பழமொழி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.