கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 'விளக்கு' விருது !
சென்னை, டிச.23: தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு "விளக்கு' இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான "விளக்கு' புதுமைப்பித்தன் நி
சென்னை, டிச.23: தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு "விளக்கு' இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான "விளக்கு' புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒவ்வோராண்டும் விருது வழங்கி கெüரவித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதில் ரூ.40 ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும். வே.சபாநாயகம், ராமசாமி, சிபிச்செல்வன் அடங்கிய குழு இந்த விருதிற்காக கவிஞர் விக்ரமாதித்யனைத் தேர்ந்து எடுத்துள்ளது.
Advertisement
Advertisement
62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் "ஆகாசம் நீல நிறம்', "ஊரும் காலம்', "உள்வாங்கும் உலகம்' உள்ளிட்ட 16 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், 7 கட்டுரைத் தொகுப்புகளும் அவரின் பங்களிப்புகள். கவிஞர் விக்ரமாதித்யன் ஒரு பத்திரிகையாளரும் கூட. தாய், தராசு, நக்கீரன், இதயம் பேசுகிறது, விசிட்டர் போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். மனைவியும் பிரேம்சந்த், சந்தோஷ் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
தமிழ் படைப்பாளிகளான சி.சு.செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், அம்பை, தேவதேவன் முதலானோருக்கு கடந்த ஆண்டுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.