மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்!
மலையாள நடிகர் சலீம் குமார் உயிரிழந்தது பற்றி...
புகழ்பெற்ற மலையாள நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் (56) நேற்றிரவு (ஜூன் 6) காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரளத்தின் பரவூரில் பிறந்த சலீம் குமார், திரையுலகில் நுழைவதற்கு முன் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக இருந்தார்.
Advertisement
Advertisement
பின்னர் 1997 ஆம் ஆண்டு வெளியான ’இஷ்டமானு நூறு வட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1997 ஆம் ஆண்டு திரைப்படத்தில் அறிமுகமானாலும், 2000-களில்தான் அவரது நகைச்சுவை நடிப்பு அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.
இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மலையாள சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராகத் திகழ்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், இயக்குநர், மிமிக்ரி கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர்.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக வளம் வந்த சலீம் குமார், 2010 ஆம் ஆண்டு வெளியான ’ஆடமின்டே மகன் அபு’ திரைப்படத்துக்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
மேலும், தமிழில் வெளியான நெடுஞ்சாலை, மரியான் போன்ற படங்களிலும் சலீம் குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.