முகப்பு
தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் வருகை

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை காலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது. இதையடுத்து குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

Updated On : 2 ஜூன், 2013 at 3:11 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை காலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது. இதையடுத்து குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக குற்றாலம் பேரருவி வறண்டு போய், அருவியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக பேரருவியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது.

அதே போல் ஐந்தருவியின் நான்கு கிளைகளில் குறைந்தளவு தண்ணீர் விழுகிறது. அருவிகளில் தண்ணீர் விழும் செய்தி பரவியதையடுத்து சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement

குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள தோப்புகளில் உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். சனிக்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. பிற்பகலில் ஐந்தருவி பகுதிகளில் சாரல் மழை அதிகமாக இருந்தது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.