முகப்பு
தமிழ்நாடு

வி.சி.சுக்லா மரணம்: ஆளுநர் ரோசய்யா இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லாவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூன், 2013 at 2:52 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லாவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்ட இரங்கல் செய்தி: வி.சி. சுக்லாவின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர். அவருடைய மரணம் நாட்டுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வி.சி.சுக்லாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.