முகப்பு
தமிழ்நாடு

நடுரோட்டில் கவிழ்ந்த 3 லாரிகள்: 4 டிரைவர்கள் காயம்

காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் கல்கத்தா காளி கோயில் அருகே 3 லாரிகள் புதன்கிழமை விடியற்காலை கவிழ்ந்தன. இதில் 4 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 2:00 am IST
பகிர்:

காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் கல்கத்தா காளி கோயில் அருகே 3 லாரிகள் புதன்கிழமை விடியற்காலை கவிழ்ந்தன. இதில் 4 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

வேலூரில் இருந்து சென்னைக்குச் சென்ற கன்டெய்னர் லாரியின் டயர், காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் காளி கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையைத் தாண்டி சாலையில் கவிழ்ந்தது.

அப்போது, சென்னை செங்குன்றத்தில் இருந்து ஆரணி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த மற்றொரு லாரி ஏற்கெனவே ரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரி மீது மோதியது. நெல் மூட்டை லாரியை பின் தொடர்ந்து வந்த டீசல் டேங்கர் லாரியும் அதன்மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர்கள் சுரேஷ் (26), ராஜ்குமார் (32), பூங்காவனம் (35), ரவி (44) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கித் தவித்த 3டிரைவர்களை போராடி மீட்டனர். நெல் மூட்டை லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் ராஜ்குமாரை தீயணைப்புப் படையினர் உதவியுடன் 3 மணி நேரம் போராடி மீட்டனர். இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.