முகப்பு
தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

திருவள்ளூரில் புதன்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

Updated On : 12 செப்டம்பர் 2013, 4:35 am IST
பகிர்:

திருவள்ளூரில் புதன்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடந்த 9-ம் தேதி, இந்து அமைப்பினர் சார்பில் திருவள்ளூரில் முக்கியப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

சிலை வைக்கப்பட்ட 3-ம் நாளான புதன்கிழமை திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், செவ்வாப்பேட்டை, புட்லூர், வேப்பம்பட்டு, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை உள்ளிட்ட இடங்களில் இருந்து திருவள்ளூர் ஆயில்மில் பகுதிக்கு பல்வேறு வடிவங்களிலான 30-க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு வரப்பட்டன.

Advertisement

Advertisement

பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜே.என். சாலை வழியாக ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலத்தின் போது திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலை, திருவள்ளூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணியில்...

இதே போல், திருத்தணி நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 விநாயகர் சிலைகள் நந்தி ஆற்றில் புதன்கிழமை கரைக்கப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.