கரூர் அருகே மதுப்பழக்கத்தை மறக்க முடியாத லாரி ஓட்டுநர் வெள்ளிக்கிழமை தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் குடித்தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து (50). லாரி ஓட்டுநர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான, இவரால் மதுகுடிக்கும் பழக்கத்தை மறக்க முடியவில்லை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வீட்டில் உடலில் மண்ணெண்ணையை
ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸில் அவரது மனைவி புனிதாவாசுகி (40) அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.