சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.
மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வித்யாசாகர் ராவ், விமான நிலையத்தில் இருந்து நேராக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்கிறார்.
அங்கு, தமிழக மூத்த அதிகாரிகளையும், முக்கிய அமைச்சர்களையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்துப் பேச உள்ளார். மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த அதிமுக தலைவர்களும் அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்கனவே குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.