தமிழ்நாடு

வங்கி அதிகாரியை தாக்கிய பிகார் எம்எல்ஏ மீது வழக்கு

பிகாரில் கடிஹார் மாவட்டத்தில் உள்ள வங்கியின் அதிகாரி ஒருவரை தாக்கியதாக அம்மாநில எம்எல்ஏ மெஹ்பூப் ஆலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PTI

கடிஹார்: பிகாரில் கடிஹார் மாவட்டத்தில் உள்ள வங்கியின் அதிகாரி ஒருவரை தாக்கியதாக அம்மாநில எம்எல்ஏ மெஹ்பூப் ஆலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கியின் அதிகாரி ராகேஷ் ரஞ்சன், காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எம்எல்ஏ ஆலம், வங்கிக்குள் நுழைந்து தன்னை தாக்கி, வங்கியை மூடுமாறு மிரட்டியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எம்எல்ஏவிடம் கேட்ட போது, இந்த புகார் முற்றிலும் உண்மையில்லாதது, வங்கி அதிகாரி என் மீது புகார் அளித்தால், அவர் மீது நான் புகார் அளிப்பேன், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே வங்கிக்குச் சென்றேன், வங்கி அதிகாரி ஊழல் வாதி என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

சிம் காா்டுகளைப் பயன்படுத்தி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: 5 போ் கைது

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்

SCROLL FOR NEXT