விராலிமலை: விராலிமலை அடுத்த மாத்தூரில் எவ்வித ஆவணமும் இல்லாமல் சுமையுந்தில்(லோடு ஆட்டோ) கொண்டுவரப்பட்ட ரூ. 5.95 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விராலிமலை தொகுதிக்குள்பட்ட மாத்தூர் பகுதியில் வட்டார துணை ஆய்வர்(சர்வே துறை) எம். காளிதாஸ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமநாதபுரம் பகுதியில் இருந்து வந்த 5 சுமையுந்தில்(லோடு ஆட்டோ) ஆடு ஏற்றிக்கொண்டு வந்தவர்களிடம் சோதனையிட்டதில், அதில் ரூ. 5.95 லட்சம் இருந்தது தெரியவந்தது.
அதிலிருந்த ராமநாதன், ராஜகோபால்,கந்தையா ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் ஆடு வாங்க வந்ததாக கூறியதாக தெரிவித்தனர். தொடர்ந்து விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். டெய்சிகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல், விராலிமலை தொகுதி குன்னத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்கள் தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் ரூ. 44.800 ஆயிரத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர், பணத்தை கைப்பற்றி தேர்தல் அலுவலர் ஏ. முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.