தமிழ்நாடு

பரமக்குடி அருகே விபத்து: தம்பதிகள் சாவு

கே. தத்து

பரமக்குடி: பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சிவகங்கை மாவட்டம், பெரும்பாளை கிராமத்தை சேர்ந்தவர் துரை சிங்கம்(65),இவருடைய மனைவி காளிமுத்து. தம்பதிகளான இவர்கள் சத்திரக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பினர்.  

இந்நிலையில் இவர்கள் முத்துவயல் விலக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் திடீரென இருசக்கரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT