தமிழ்நாடு

எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சோதனை: தமிழிசைக்கு தினகரன் கேள்வி

DIN


சென்னை: ஆதாரங்களின் அடிப்படையில்தான் சோதனை நடப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எப்படி தெரியும் என்று அம்மா அதிமுக கட்சி வேட்பாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், என்னுடைய வெற்றி உறுதியாகிவிட்டதால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்த சோதனையின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன் என்றார்.

மேலும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் சோதனை நடப்பதாக தமிழிசை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைகள், ஆதாரங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆதாரங்கள் என்னென்ன என்பதை அவர் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT