தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்து வதந்தி பரப்பிய மருத்துவருக்கு ஜாமீன்

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக கைதான போலி பெண் மருத்துவர் ராமசீதாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பெரம்பூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ராமசீதா (52) கடந்த பிப்ரவரி 25 -ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ராமசீதா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT