தமிழ்நாடு

6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓ. பன்னீர்செல்வம்

DIN


சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன், ஆதரவாளர்கள் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள் அவர்களை வரவேற்றனர்.

அதிமுக தலைமை அலுவலக வளாகமே தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தலைமை அலுவலகத்துக்கு வந்திருப்பதன் மூலம், கடந்த ஓரிரு நாட்களாக இரு அணிகள் இணைப்பில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT